Work passes அனுமதிக்கு ஒப்புதல் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனையாக கோவிட்-19 தடுப்பூசி இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், புதிய நீண்ட கால அனுமதிகள், நிரந்தரவாசிகளுக்கான ஒப்புதலுக்கும் இனி கோவிட்-19 தடுப்பூசி போடப்படுவது கட்டாய நிபந்தனையாக இருக்கும்.
திருச்சி-சிங்கப்பூர் இடையே தினசரி இண்டிகோ விமான சேவை!
அடுத்த ஆண்டு 2022, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
அதே போல, ஏற்கனவே உள்ள work passes அனுமதிகளைப் புதுப்பிப்பதற்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரின் அதிகமான தடுப்பூசி விகிதங்களை நிலைநிறுத்தவும், பொருளியல் மற்றும் சமூக நடவடிக்கைகளை பாதுகாப்பாக மீண்டும் துவங்க வசதியாகவும் இந்த புதிய நடவடிக்கைகள் இருக்கும் என அது கூறியுள்ளது.
work pass அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கு, விண்ணப்பிக்கும்போது தடுப்பூசி நிலை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை – டிசம்பர் 29 முதல் தொடக்கம்!