மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இஸ்ரேல் நாட்டு பிரதமர், அதிபர், அமைச்சர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
புதர்களுக்குள் கிடந்த சடலம்…துப்புரவு ஊழியர் கொடுத்த புகார் – விசாரணை நடத்தி வரும் போலீஸ்!
இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக்கை நேற்று (22/03/2022) சந்தித்துப் பேசினார். இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக் (President Isaac Herzog) மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நீடித்த உறவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
தொற்றுநோய்க்குப் பிந்தைய எதிர்காலத்தை நோக்கி நாம் பார்க்கும்போது, மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பல இன மற்றும் பல மத சமூகமாக சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் யூத சமூகம் செய்த வரலாற்று மற்றும் பன்முக பங்களிப்புகளை அவர் குறிப்பிட்டார். அதிபர் ஐசாக் ஹெர்சோக் மற்றும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய சுதந்திரமான மற்றும் பரந்த அளவிலான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பின்னர், இஸ்ரேல் அதிபர் மாளிகையில் விருந்தினர் புத்தகத்தில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் நிட்சன் ஹொரோவிட்ஸை (Health Minister Nitzan Horowitz) சந்தித்தார். இருவரும் கொரோனா நோய் பரவல் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மூன்று நாள் பயணமாக மலேசியாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர்!
மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று (23/03/2022) ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (United Arab Emirates) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்”. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.