மூன்று நாள் பயணமாக மலேசியாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர்!

File Photo: Health Minister Ong Ye Kung

சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங், மூன்று நாள் அரசுமுறை அதிகாரப்பூர்வ பயணமாக இன்று (23/03/2022) மலேசியாவுக்கு செல்லவிருக்கிறார்.

சிங்கப்பூரில் புதிதாக 13,166 பேருக்கு COVID-19 பாதிப்பு – மேலும் 6 பேர் மரணம்

இது குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மலேசியா நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் யாங் பெர்ஹார்மட் துவான் கைரி ஜமாலுதீனின் (Minister of Health of Malaysia, Yang Berhormat Tuan Khairy Jamaluddin) அழைப்பின் பேரில், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங் இன்று (23/03/2022) முதல் வரும் மார்ச் 25- ஆம் தேதி வரை மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

பயணத்தின் போது சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர், மலேசியாவில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். பின்னர், நாளை (24/03/2022) தேசிய சுகாதார நிறுவனத்துக்கு (National Institutes of Health) செல்லும், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய உரையை நிகழ்த்துவார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – இதுபோன்ற தவறிழைக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்!

சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சரின் பயணத்தின் போது, சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உடனிருப்பர்.” இவ்வாறு சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.