சிங்கப்பூரில் இன்று பிரதமர் லீ நாட்டு மக்களிடம் கோவிட்-19 நிலைமை குறித்து உரை நிகழ்த்தி வருகிறார்.
இதில் வரும் மார்ச் 29 முதல், வெளி இடங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாக மாறும், கட்டாயமாக இருக்காது என்று கூறினார்.
மேலும் சமூகக் ஒன்றுகூடலுக்கான குழு அளவு கட்டுப்பாடுகள் ஐந்திலிருந்து 10 நபர்களாக இரட்டிப்பாக்கப்படும் என்று கூறினார்.
ஏனெனில், சிங்கப்பூர் கோவிட் -19 தொற்றுநோயிடன் வாழ்வதற்கான தீர்க்கமான நகர்வை மேற்கொள்வதாக, பிரதமர் லீ சியன் லூங் இன்று தனது உரையில் (மார்ச் 24) கூறினார்.
வெளியில் முகக்கவசம் அணிவது விருப்பமானது என்றாலும், அது உள் இடங்களுக்குள் (indoors) தேவை என்று திரு லீ, கோவிட் -19 நிலைமையை மேம்படுத்துவது குறித்த உரையில் கூறினார்.
புதர்களுக்குள் கிடந்த சடலம்…துப்புரவு ஊழியர் கொடுத்த புகார் – விசாரணை நடத்தி வரும் போலீஸ்!