MRT ரயிலில் ஆடவர் ஒருவர் தனது முகக்கவசத்தை இழுத்து கீழே விட்டுவிட்டு, சாவகாசமாக தனது கைபேசியை பார்த்தபடி, Vaping கருவி மூலம் புகை இழுத்துக்கொண்டிருக்கும் வீடியோ வலைத்தளங்களில் வெளியானது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @sgfollowsall என்ற கணக்கு மூலம் பகிரப்பட்டுள்ளது.
இந்த காட்சியை பதிவு செய்த ஷாகீர் கூறியதாவது; இந்த சம்பவம் ஏப். 7 ஆம் தேதி இரவு சுமார் 8.25 மணியளவில் கிழக்கு-மேற்கு பாதையில் நடந்ததாக கூறினார்.
சம்பவ இடத்தில் MRT ஊழியர்கள் யாரும் இல்லை என்றும், மேலும் சில பயணிகளும் அவரை பார்த்ததும் விலகிச் செல்லத் தொடங்கியதாகவும் ஷாகிர் குற்றம் சாட்டினார்.
அந்த ஆடவரின் இந்த மோசமான செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோதம்
2018 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், சிங்கப்பூரில் vaporisers கருவிகளை வைத்திருப்பது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும்.