விமான பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருக்கும் வீடியோ வலைத்தளங்களில் கடுமையாக வைரல் ஆகி அனைவருக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் இருந்து ஜெர்மனிக்கு பறந்த சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்தது குறித்து அந்நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் கறார்
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் உணவு தட்டையில் பாம்பின் தலை வெட்டப்பட்டு இருப்பதை காண முடிகிறது.
30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருப்பதாகவும், நிறுவனம் மிக உயர்ந்த தரம் கொண்டது எனவும், இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்நிறுவனம் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்த வீடியோ குறித்து விசாரித்து வருவதாகவும் சன்எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் கோத்தபய ராஜபக்ச… குறுகிய-கால அனுமதி நீட்டிப்பு!