தியோங் பாரு சாலையில், ரெட்ஹில் MRT நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று (ஆகஸ்ட் 29) ஏற்பட்ட விபத்தில் 80 வயதுடைய பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று காலை 10 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) காவல்துறையும் தெரிவித்தன.
சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்
விபத்தை அடுத்து, 80 வயது மூதாட்டி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக SCDF கூறியது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் மயக்க நிலையில் இருந்தார் என்றும், பின்னர் அவர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 49 வயதான பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.