சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த ஊழியர் தனது பாஸ்போர்ட்டால் சிறையில் தண்டனை அனுபவிக்க நேரிட்டுள்ளது.
இண்டிகோ விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது. அதில் 49 வயதான துரைராஜ் என்ற ஊழியர் வந்துள்ளார்.
MRT ரயிலில் சிறுநீர் கழித்த பெண் – வீடியோ வைரல்.. நெட்டிசன்கள் காட்டம்
அவர் புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் வழக்கம் போல பயணிகளை சோதனை செய்தனர்.
அதன் வரிசையில் துரைராஜ் பாஸ்போர்ட் சோதனை செய்யப்பட்டது, அப்போது அதில் 4 பக்கங்கள் கிழிக்கப்பட்டு சேதம் அடைந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் அவரை போலீசிடம் அவர்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில், அவரை கைது செய்த போலீஸ் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், விசாரணை நடந்து வருகிறது.