புக்கிட் திமா அதிவிரைவுச் சாலையில் (BKE) நேற்று முன்தினம் டிசம்பர் 3, அன்று மதியம் 2:55 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் 70 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்தார்.
அதாவது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இந்த சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி… ரூ.18 லட்சம் பொருள் கடத்தல் – சிக்கிய ஊழியர்
மேலும் காரில் இருந்த ஒன்று முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆறு பயணிகள் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தகவலை காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) நேற்று தெரிவித்தன.
இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 35 வயதுடைய பெண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் SCDF துணை மருத்துவர் உறுதி செய்தார்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
“தலையில் வழுக்கை, திருமணம் நடக்கல”… முடி மாற்று சிகிச்சை செய்த இந்தியர் – கடுமையான முறையில் மரணம்