சிராங்கூன் அவென்யூ 4ல் நேற்று புத்தாண்டு தினத்தன்று (ஜன. 1) 28 வயதுடைய ஆடவர் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இறந்த நிலையில் கிடந்த அவர் குறித்து சிங்கப்பூர் காவல் படை (SPF) மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஆகியவைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதாவது அன்று மதியம் 1:40 மணியளவில் உதவி வேண்டி புகார் அழைப்பு வந்ததாக அவைகள் தெரிவித்தன.
அதன் பின்னர் அங்கு விரைந்து சென்ற SCDF மீட்பு படை, அவரை சோதித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், போலீசார் சதிச்செயல் எது குறித்தும் சந்தேகிக்கவில்லை. அவர் யார் என்ற செய்தியையும் அது வெளியிடவில்லை.
தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.