சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ சிவன் கோயில். இந்த கோயில் 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது. இக்கோயிலில் விஷேச நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று (06/01/2023) ஆருத்ரா தரிசன வழிபாடு (Aarudra Dharisanam Prayers) நடைபெற்றது.
” அவள் கொல்லப்பட வேண்டியவளா?” – அடிக்கடி வெளியே சென்று வந்த மகளை கத்தியால் குத்திய தாய்!
அதன்படி, இன்று (06/01/2022) அதிகாலை 04.30 மணிக்கு நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 05.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜையும், காலை 07.00 மணிக்கு உபய பூஜையும், காலை 07.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், காலை 08.00 மணிக்கு பிரசாத விநியோகமும் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனம் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.