சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), திருச்சி, சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தினசரி இரண்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது.
நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நடப்பு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வழித்தடத்தில் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், ‘A321neo’ விமானத்தை இயக்கி வருகிறது. ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி, சிங்கப்பூர் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://beta.makeabooking.flyscoot.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.