சிங்கப்பூர்: பிளாக் 58 லோரோங் 4 தோ பாயோவில் கடந்த அக். 11 அன்று இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானது.
இதில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஆண் மற்றும் பெண் என்றும், முறையே 33 மற்றும் 35 வயது இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அன்று இரவு 11.18 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் 31 வயதுடைய பெண் ஓட்டுநர் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் கூறினர்.
33 வயதுடைய ஆண் ஓட்டுநர், போலீசார் வரும் முன்னதாகவே சம்பவ இடத்திலிருந்து தப்பித்ததாகவும், பின்னர் போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சிறு காயங்களுக்கு ஆளான 35 வயதான பெண் பயணி, சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பின்னர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!