Bedok Reservoir பூங்காவில் உள்ள நீரில் 21 வயது இளைஞர் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று (நவ.21) அவரது சடலம் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று காலை 9:10 மணியளவில், மேற்கண்ட முகவரியில் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மதர்ஷிப்பிடம் கூறியது.
அதே நேரத்தில், சிங்கப்பூர் காவல் படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டதாக ஷின் மின் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் நீருக்கடியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர் SCDF வீரர்கள், அந்த நபரின் உடலை கண்டுபிடித்து மீட்டனர். ஆனால், அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் பை மற்றும் பொம்மை ஒன்றும் காணப்பட்டது.
மேலும் தண்ணீருக்குச் செல்லும் படிகளில் நொறுக்கு தீனிகள் மற்றும் மூன்று மதுபாட்டில்கள் காணப்பட்டன.
அதோடு, அருகில் உள்ள புல்வெளியில் மிதிவண்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் கொலை சந்தேகம் இல்லை என தெரிவித்தனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
இயந்திரத்தில் தலை சிக்கி மரணித்த வெளிநாட்டு ஊழியர் – இயந்திரத்தை பராமரிக்கவில்லை என்பதே உண்மை…