சிங்கப்பூரில், 63 வயதான சிங்கப்பூரர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 3) விமானப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டபோது விமானத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.
இந்த விபத்து கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
31 ஏர்லைன் சாலையில், SIA இன்ஜினியரிங் கம்பெனி (SIAEC) தொழிலாளி விமானத்தில் பணிபுரியும் போது, உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தி நியூ நாளிதழிடம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் நிகில் மேத்யூ நேரலை இசை நிகழ்ச்சி..!
இதனை அடுத்து, கீழே விழுந்த அவரை ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் மாடுகளுடன் களைகட்ட தொடங்கிய பொங்கல் கொண்டாட்டம்..!
மேலும், SIAEC நிறுவனம் அதன் வேலை நடைமுறைகள், அபாயக் கட்டுப்பாடு ஆகியவற்றை உடனடியாக மறுஆய்வு செய்யவும், அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.