தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, காணொளி மூலம் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த காணொளியில், “இயற்கை, மனிதனுக்கு எதிராய்த் தொடுத்திருக்கும் பெரும் போரில் நாமும் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இதனைப் பொறுமையால் வெல்வோம்” என்று அவருக்கே உண்டான பாணியில் தன்னம்பிக்கை அளித்துள்ளார்.
கூடுதலாக “கட்டுப்பாட்டால் வெல்வோம்! சகிப்புத்தன்மையால் வெல்வோம்”, “நீங்கள் தாயகம் வருவது சத்தியம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.