சிங்கப்பூரில் நண்பகல் நிலவரப்படி, புதிதாக 596 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 19) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 6,588ஆக உயர்ந்துள்ளது.
இதில் 25 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், இன்று இரவு செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.