என்னாது விமானத்தில் பாம்பா!!! தெறித்த பயணிகள்… பரபரப்புடன் தரையிறங்கிய விமானம்! (வைரல் வீடியோ)

AirAsia plane

கோலாலம்பூரில் இருந்து சபாவின் தவாவ் நகருக்குச் செய்துகொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பாம்பு இருந்ததை அடுத்து, விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நடுவானில் பாம்பு தென்பட்டதால், நேற்று முன்தினம் பிப்ரவரி 10ம் தேதி சரவாக், குச்சிங்க்கு விமானம் அவசரமாக திருப்பி விடப்பட்டது.

சிங்கப்பூர் Work permit அனுமதியில் பலே திட்டம்… ஆடவருக்கு சிறை – ஒருவர் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தர தடை!

கருநிறமுடைய இந்த பாம்பின் நிழல் விமான மேல்நிலைப் பெட்டி ஒன்றில் காணப்பட்டது.

இந்த பாம்பின் வீடியோவை படம் பிடித்த பயணி ஒருவர் அதனை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பாம்பு தென்பட்டதை அடுத்து, அதனை அறிந்த விமானத்தின் கேப்டன் விமானத்தை திருப்பி விட முடிவு செய்ததாக ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.

போலி கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் விற்பனை… பொதுமக்கள், ஊழியர் என 25 பேர் கைது