தேடப்பட்டு வந்த ஊழியர்… சென்னை விமான நிலையத்தில் வைத்து தூக்கிய போலீஸ்!

இந்தியாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கத்தார் நாட்டில் இருந்து சென்னை வந்த ‘இண்டிகோ’ விமானத்தில் பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

காணாமல் போன சிங்கப்பூர் பெண்…ஜோகூர் பாரு ஆற்றில் மிதந்த சோகம் – என்ன நடந்தது ?

அச்சமயம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதான ரபீக் என்ற பயணி கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி என அவர்களுக்கு சோதனையில் தெரியவந்தது.

கேரள காசர்கோடு மாவட்டத்தில், 2020 ஆம் ஆண்டு அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், கேரள மாநில காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு இண்டிகோ விமானம் வழங்கும் சிறப்பு சலுகை