காணாமல் போன சிங்கப்பூர் பெண்…ஜோகூர் பாரு ஆற்றில் மிதந்த சோகம் – என்ன நடந்தது ?

singapore-woman-found-malaysia-river
Photo: Mothership

கடந்த ஜனவரி 31ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படும் 64 வயது சிங்கப்பூர் பெண், நேற்று பிப்ரவரி 2ஆம் தேதி மலேசிய ஜோகூர் பாருவில் உள்ள பெலன்டாங் ஆற்றில் (Pelentong River) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

அன்று காலை 10:45 மணியளவில் ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டறிந்த ஜொகூர் பாரு போலீசார், அந்த உடல் காணாமல் போன சிங்கப்பூர் பெண் தான் என அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு இண்டிகோ விமானம் வழங்கும் சிறப்பு சலுகை

அந்த பெண் மலேசியாவில் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. இவர், மலேசியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று 8 வேர்ல்ட் செய்தி தெரிவித்துள்ளது.

அந்தப் பெண் கடந்த ஆகஸ்ட் 2021ல் ஜோகூர் பாருவின் புறநகர்ப் பகுதியான பெர்மாஸ் ஜெயாவுக்கு திரும்பினார்.

இதனை அடுத்து, அவர் கடந்த ஜனவரி 31 அன்று அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது, ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என அப்பகுதி போலீசார் தெரிவித்தனர்.

காயத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், தற்போதைக்கு சதி செயல் ஏதும் போலீசார் சந்தேகிக்கவில்லை.

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டு வாழ்க்கை…பிரிய மனமில்லாமல் அழுத மனைவி; இணையத்தில் வைரல்!