வெளிநாட்டு வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. வெளிநாடு சென்று இரண்டு வருடம் பணம் சம்பாதித்து வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிட்டு திரும்ப சொந்த நாட்டிற்கே வந்து விடலாம் என்று எண்ணிதான் தொடங்குகிறது இந்த பயணம்.
வெளிநாட்டு வேலை என்பது என்னதான் கைநிறைய ஊதியத்தை கொடுத்தாலும், மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதா ஒன்றாகத்தான் உள்ளது.
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் எப்போது பிள்ளைகளை பார்ப்போம் என எதிர்பார்ப்புடனும், சொல்லவே முடியாத வலியுடனும் கடல் தாண்டி கடினமான வாழ்க்கைகளை வாழ்ந்து வருகின்றனர்.
திருமண நாளன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மனைவி; சுமார் $650,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு.!
தன் கணவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தருணத்தில் மனைவியின் நிலையை பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்களின் எதிர்காலம் கடல் கடந்து செல்வதை எண்ணி மனம் கலங்குக்கின்றன.
அதுபோல, கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தன் கணவரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி விட வந்த மனைவி கணவரை விட்டு பிரிய மனமில்லாமல் அழுகும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.