55 பயணிகளுடன் ஓடுபாதையை தாண்டி ஓடிய விமானம்!

Pic credt; India Today

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் (Jabalpur) விமான நிலையத்தில் நேற்று (மார்ச் 12) ஏற்படவிருத்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

ATR 72 ரக விமானம் ஒன்று நேற்று காலை 11.32 மணியளவில் இந்திய தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜபல்பூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டு சென்றது.

லிட்டில் இந்தியாவிலுள்ள முக்கிய கிளையை மூடும் பிரபல கோமளாஸ் உணவகம்!

பின்னர், ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் திடீரென விமான ஓடுதளத்திலிருந்து விலகி மண் தரையில் சென்றது.

உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள், விமானத்தை பத்திரமாக நிறுத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் விமானம் விபத்துகுள்ளாகவில்லை.

விமானத்தில் பயணம் செய்த 55 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றன.

லாட்டரி வாங்கியவர், கொண்டு சென்றவர் உட்பட 12 பேரிடம் போலீஸ் விசாரணை