வெளிநாட்டில் உயிரிழந்த தமிழக ஊழியர்… கடைசி வரை இருந்து இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்கள்!

வெளிநாட்டில் உயிரிழந்த தமிழக ஊழியரின் உடலை, இசுலாமியர்கள் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்தனர்.

துபாயில் நடந்த இந்த சம்பவம் மனிதாபிமானத்தையும், “நாங்கள் ஒன்று தான்” என்பதை நிரூபிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுதியை இழக்கும் அபாயத்தில் உள்ள 31,500 பேர்!

நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இஸ்லாமிய ஊழியர்கள் நிரூபித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த 58 வயதான அருணா தங்கப்பா என்பவர் கடந்த டிச. 15 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரின் உடலை அங்கேயே நல்லடக்கம் செய்ய வேண்டும் என அவரது சகோதரர் கூறியதை அடுத்து, இந்திய துணை தூதரத்தின் ஒத்துழைப்புடன் கடந்த பிப். 6ம் தேதி அன்று அவரின் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

அதாவது, இஸ்லாமியர்கலால் இறுதிசடங்கு நடத்தப்பட்டு, ஜெபல் அலி மயானத்தில் மின்சாரம் மூலம் தகனம் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் பால் பவுடர் வாங்கியவருக்கு அடித்த அதிஷ்டம்… குலுக்கலில் S$88,888 ரொக்கப் பரிசை தட்டி சென்றார்!