சென்னைக்கு விமானத்தில் பயணித்த பயணி நடுவானில் உயிரிழந்த சோகம்

who came to Chennai from Singapore was arrested

துபாய் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் ஒன்று கடந்த ஜன., 19 அன்று வந்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்த நாகப்பட்டினத்தை சேர்ந்த மதர்ஷா பஷீர் (வயது 47) என்பவருக்கு நடுவானில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது.

சிங்கப்பூர் DBS வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இதனால் நிலைகுலைந்த அவர் இருக்கையிலேயே மயக்கமடைந்துள்ளார். இதனை அடுத்து பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

அதன் பின்னர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அதிகாலை 4.30 மணியளவில் விமானம் தரையிறங்கியவுடன் அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை பரிசோதனை செய்தனர்.

ஆனால், அவருக்கு ஏற்பட்ட கடும் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை அவர்கள் உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Breaking: சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு எளிமையாகும் சோதனை கட்டுப்பாடுகள்!