உள்ளாடையிலுமா?…விமான நிலையத்தில் சிக்கிய 3 பெண்கள் – எப்டிலாம் யோசிக்கிறாங்க!

தமிழக விமான நிலையங்களில் கடத்தல் தங்கம் வருவதும் அவற்றை அதிகாரிகள் பிடிப்பதும், மீண்டும் கடத்தல் தங்கம் வருவதும் அது பிடிபடுவதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

இந்த முறை சென்னை விமான நிலையத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கையிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: சாலையில் குட்டிக்கரணம் அடித்து தீ பற்றி கொடூர விபத்து – (காணொளி)

அப்பொழுது மூன்று பெண்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மூன்று பெண்களும் ஒன்றாகவே வந்துள்ளனர், அதேபோல மூன்று பேருமே சென்னையை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் அவர்களை தனித்தனியே சோதித்துப் பார்த்ததில் தலையின் விக் உள்ளே தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. விக் உள்ளே தங்க வளையல்கள் சிறு தங்க கட்டிகள் இருந்துள்ளன.

பின்னர் பெண்களின் உள்ளாடையும் சோதனையிட்டனர் அதிகாரிகள். அதில் தங்க பசைகள் அடங்கிய சின்ன சின்ன பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 525 கிராம் தங்கம் பிடிபட்டது என்றும் அதன் மொத்த மதிப்பு ரூபாய் 23 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

“சிங்கப்பூர் செல்ல வேண்டாம்” என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நாடு…!