சிங்கப்பூர் செல்லும் தன் நாட்டு மக்களுக்காக சில அறிவிப்புகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அதன் குடிமக்கள் சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
லோயாங் டிரைவில் ஏற்பட்ட அபாயகரமான இரசாயனக் கசிவு
மேலும் சிங்கப்பூரின் பயண சுகாதார நிலைப்பாட்டை “நிலை 4 ” என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அதாவது கோவிட்-19 பாதிப்பின் “மிக உயர்ந்த நிலை” என்று சிங்கப்பூரை அது வகைப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் மட்டுமல்லாமல், பிரேசில், ஈக்வடார், கொசோவோ, பிலிப்பைன்ஸ் மற்றும் பராகுவே ஆகிய பகுதிகளுக்கும் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.