திருச்சி வந்த விமானத்தில் பயணித்த இருவரிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் சிக்கியது, இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
‘இண்டிகோ’ விமானம் அமீரகம் துபையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் வழக்கம் போல
சோதனை செய்தனர்.
“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு
அப்போது சென்னையை சேர்ந்த இரு பயணிகளிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600க்கும் அதிகமான கிராம் தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
விதிகளை மீறி ஒன்று கூடிய வெளிநாட்டவருக்கு S$3,000 அபராதம்..!