சிங்கப்பூரில் அதிக பொருட்செலவில் அமையவுள்ள புதிய தடுப்பூசி உற்பத்தி ஆலை – வேலைவாய்ப்புகள் உருவாகலாம்!

(Photo: MiBiz)

சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ள தடுப்பூசி மருந்து உற்பத்தி ஆலைக்கு, சனோஃபி பாஸ்டர் என்ற பெரிய நிறுவனம் சுமார் S$638 மில்லியன் முதலீடு செய்து வருகிறது.

இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் கொள்ளை நோய் போன்ற அச்சங்களுக்கு உடனடி தீர்வுகாண இந்த ஆலை உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வங்கி கணக்குகளை குறிவைக்கும் மோசடி – எச்சரிக்கை பதிவு

தற்போது உள்ள தடுப்பூசி ஆலைகளில் ஒரு நேரத்தில் ஒரு வகையான தடுப்பூசி மருந்துகளை மட்டுமே தயாரிக்கும் இந்த சூழலில், துவாஸ் உயிர்மருத்துவ பூங்காவில் உருவாக உள்ள அந்த ஆலை 3 அல்லது 4 வகையான தடுப்பூசி மருந்துகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றது.

இதற்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட தடுப்பூசி உற்பத்தி ஆலையமாக அது கட்டுமான பணிகள் முடிந்தவுடன் இருக்கும் என்று சனோஃபி பாஸ்டர் நிறுவனத்தின் உலக தடுப்பூசி தொழில் விவகார பிரிவின் தலைவர் வின் செண்ட் ஹிங்கோட் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய திரு ஷாக்கி முகம்மது!

இந்த தடுப்பூசி ஆலை, சிங்கபூருக்கு மட்டுமில்லாமல் இந்த வட்டாரத்துக்கே எதிர்கால கொள்ளை நோய்கைளை சமாளிக்கும் மிக முக்கிய உட்கட்டமைப்பு வசதியாக திகழும் என்றும் பொருளியல் வளர்ச்சி கலகத்தின் தலைவர் திரு போ சுவாங் ஜின் கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசி ஆலையமனது சிங்கபூருக்கு மட்டுமில்லை என்றும் இந்த வட்டாரத்துக்கே எதிர்கால கொள்ளை நோய்கைளை சமளிக்கும் திட்டங்களுக்கு மிக முக்கியமான உட்கட்டமைப்பு வசதியாக அமையும் என்றும் பொருளியல் வளர்ச்சி கலகத்தின் தலைவர் திரு போ சுவாங் ஜின் கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்களை கூறிய சிங்கப்பூர் பிரதமர் லீ..!