சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 28ம் தேதி COVID-19 கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது.
தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, சிங்கப்பூர் காவல்துறை சில போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது.
“COVID-19 தொற்றுநோய் முடிவுக்கு வர 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம்” – அமைச்சர் லாரன்ஸ் வோங்
அதில், டேங் சாலை (Tank Road) வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று சிங்கப்பூர் காவல் படை (SPF) ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த திருவிழாவை இடையூறு இல்லாமல் எளிதாக்குவதற்காக, நாளை பிற்பகல் 3 மணி முதல் ஜனவரி 28 இரவு 11.30 மணி வரை, டேங் சாலை வாகன போக்குவரத்திற்கு மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
TRAFFIC ARRANGEMENTS FOR THAIPUSAM 2021
Thaipusam 2021 will be held on 27 and 28 January 2021.
To facilitate the event, Tank Road will be closed to vehicular traffic from 27 January 2021, 3pm to 28 January 2021, 11.30pm. pic.twitter.com/DpavpD7FRs
— SingaporePoliceForce (@SingaporePolice) January 25, 2021
இந்த மூடலின் போது, காவல்துறை மற்றும் அவசர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
பார்க்கிங் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றும், தடங்கல் ஏற்படுத்தி நிற்கப்படும் வாகனங்கள் இழுத்து செல்லப்படும் என்றும் SPF தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவலுக்கு பொதுமக்கள் 6737 9393 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பேருந்து, மூன்று கார்கள் மற்றும் லாரி மோதி விபத்து – 2 பேர் மருத்துவமனையில்…