சிங்கப்பூர்- தமிழ்நாடு பொருளாதார வட்டமேசைக் கூட்டத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

Photo: Guidance Tamil Nadu Official Twitter Page

தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) நேற்று (07/12/2022) சென்னையில் ஏற்பாடு செய்திருந்த சிங்கப்பூர்- தமிழ்நாடு பொருளாதார வட்டமேசைக் கூட்டத்தில் (SG-TN Economic Roundtable) சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் தூதர் எட்கர் பாங் (Hon’ble Consul General of Singapore, Edgar Pang) கலந்துக் கொண்டார். அத்துடன் சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 20- க்கும் மேற்பட்டதொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தோனேசியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம்!

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பூஜா குல்கர்னி இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வதற்கான சாத்தியக் கூறுகள், தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் ஒத்துழைப்புகள் உள்ளிட்டவைக் குறித்து தமிழக அரசின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

பின்னர், சிங்கப்பூர் தூதருக்கு பூஜா குல்கர்னி இ.ஆ.ப. நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.