சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தமிழகத்தின் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களில் சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த வழித்தட பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சமூகம் 90’s கிட்ஸ் போல! – ரிமோட் கார் மூலம் மளிகைப் பொருட்களை எப்படி வாங்கியிருப்பார் இந்த சிங்கப்பூர் நபர் ?

அந்த அறிவிப்பில், “கவர்ச்சிகரமான கட்டணத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும் பயணிகள் பயணிக்கலாம். சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிப்பதற்கு ஆரம்ப கட்டணமாக 9,124 ரூபாயும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிப்பதற்கு ஆரம்ப கட்டணமாக 11,814 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

உஷார்..! சிங்கப்பூரில் இந்த குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது!

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நகரங்களில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திலோ, 00914440013001, 00914424301930 என்ற தொலைபேசி எண்களையோ  தொடர்புக் கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Photo: Air India Express Official Twitter Page