தமிழக முதலமைச்சருடன் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்கள் சந்திப்பு!

Photo: Chief Minister Of Tamilnadu Official Twitter Page

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (17/10/2022) காலை 11.00 மணியளவில், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.

வீடுகளில் வளர்க்கும் விலையுயர்ந்த மீன்கள்தான் ருசியா இருக்கு! – சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் தென்படும் நீர்நாய்கள்

அதன்படி, சிங்கப்பூர் நாட்டிற்கான இந்தியத் தூதர் பெரியசாமி குமரன், நைஜீரியா நாட்டிற்கான இந்தியத் தூதர் ஜி.பாலசுப்பிரமணியன், ஐஸ்லாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் பி.ஷியாம், சூடான் நாட்டிற்கான இந்தியத் தூதர் பி.எஸ்.முபாரக், கியூபா நாட்டிற்கான இந்தியத் தூதர் டாக்டர் எஸ்.ஜானகிராமன் , பப்புவா நியூ கினியா நாட்டிற்கான இந்தியத் தூதர் எஸ்.இன்பசேகர், பிஜ்ஜி நாட்டிற்கான இந்தியத் தூதர் பி.எஸ்.கார்த்திகேயன், மலாவி நாட்டிற்கான இந்தியத் தூதர் எஸ்.கோபாலகிருஷ்ணன், சுரிநாம் நாட்டிற்கான இந்தியத் தூதர் எஸ்.பாலசந்திரன், ஜைபூதி நாட்டிற்கான இந்தியத் தூதர் ஆர்.சந்திரமௌலி ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினர்.

உட்லண்ட்ஸில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது

இந்த சந்திப்பின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.