‘திருச்சி, சென்னை, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- பயண அட்டவணையை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்தில் இருந்தும் விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான பயண அட்டவணையையும் ஏர் இந்தியா நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்பட்ட KFC உணவகத்திற்கு அபராதம்

அதன்படி, இந்த வழித்தடங்களில் மார்ச் 27- ஆம் தேதி முதல் அக்டோபர் 30- ஆம் தேதி வரை கீழ்கண்ட பயண விவரங்களின் கீழ் விமானங்கள் இயக்கப்படும். சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் விமானங்கள் இயக்கப்படும். சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை, வியாழன்கிழமை ஆகிய நாட்களில் விமானங்கள் இயக்கப்படும். சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு செவ்வாய்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் விமானங்கள் இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு திங்கள்கிழமை, செவ்வாய்கிழமை, புதன்கிழமை, வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் விமானங்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து சிங்கப்பூரில் இருந்து திங்கள்கிழமை, வியாழன்கிழமை ஆகிய நாட்களில் விமானங்கள் இயக்கப்படும். மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செவ்வாய்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும்.

S Pass க்கு பதிலாக இந்திய ஊழியர்கள் உட்பட சில வேலைகளில் உள்ள ஊழியர்களுக்கு Work permit அனுமதி!

இதற்கான பயண டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.