விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
மெர்லியன் பார்க்கில் உள்ள நீர்ப்பகுதியில் மிதந்த 31 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் – யார் அவர் ?
கடந்த நவம்பர் மாதம் 26- ஆம் தேதி அன்று நியூயார்க்கில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சங்கர் மிஸ்ரா, அதே விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து சம்மந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்த நிலையில், காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும், அவரை காணவில்லை என்றும், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து, விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி காவல்துறையினர், டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்ததும், சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தியதை வைத்து, காவல்துறையினர் சங்கர் மிஸ்ரா இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூர் வீராங்கனை 18 வயதில் மரணம் – இந்திய வீராங்கனையுடன் விளையாட இருந்தவருக்கு நேர்ந்த சோகம்!
பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதற்காக, அவர் பணியாற்றிய அமெரிக்க நிறுவனம், அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘வெல்ஸ் ஃபார்கோ’ நிறுவனத்தின் (Wells Fargo) வணிகப் பிரிவின் துணைத் தலைவராக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.