ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இன்று பௌர்ணமி பூஜை!

Photo: Sri Mariamman Temple

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. நாள்தோறும் 100- க்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இதே மாதிரி உங்கள ஆச்சரியப்படுத்தினா எப்படி உணருவீங்க? – மூத்த அமைச்சர் தர்மனின் நேர்மையான பேச்சு

விஷேச நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் நிர்வாகம் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இன்று (11/08/2022) இரவு 08.30 மணி முதல் பௌர்ணமி பால்குடம் பூஜை நடைபெறும். பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். http://smt.org.sg/Services/MassEvent என்ற கோயில் இணையதளப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

குழந்தையின் உயிரை எடுத்த அரக்கன்… 15 பிரம்படிகளுடன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்

கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே பக்தர்கள் கோயில் வளாகத்தைச் சுற்றி வர முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பௌர்ணமி வழிபாட்டை பார்வையிடலாம்.

இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.