தனது காதலியின் ஒன்பது மாத ஆண் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தலையை வேனின் தரைப் பலகையில் தள்ளிக் விட்டு கொன்றதாக சொல்லப்படும் 29 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், அத்துடன் சேர்த்து 15 பிரம்படிகளும் இன்று (ஆகஸ்ட் 11) விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு: தூண்-பேருந்து இடையே சிக்கி பலியான சோகம்
மொஹமட் அலிஃப் மொஹமட் யூசோஃப் என்ற அந்த ஆடவர் கடந்த மாதம் இஸ் ஃபயாஸ் ஜயானி அஹ்மத் என்ற குழந்தையை கொலை செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
தாம் இந்த குற்றத்தை வேண்டும் என்றே செய்யவில்லை, கையிலிருந்து குழந்தை தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டது என்ற அவரது வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த சம்பவம் நவம்பர் 7, 2019 அன்று இரவு 10 மணி முதல் நவம்பர் 8, 2019 அதிகாலை 12.15 மணி வரை யிஷுன் ஸ்ட்ரீட் 81ல் உள்ள கார் பார்க்கில் நடந்தது.