சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (மே 19) கிளெமென்டி வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் 40 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி சவரக்கருவி வாங்க சென்ற வெளிநாட்டு ஊழியருக்கு அபராதம்..!
பிளாக் 441B கிளெமென்டி அவென்யூ 3-ல், ஒன்பதாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது என்று சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து அன்று இரவு 9.35 மணியளவில் எச்சரிக்கை செய்யப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்ததாக SCDF கூறியுள்ளது.
இதில் ஒருவர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு (Ng Teng Fong General Hospital) கொண்டு செல்லப்பட்டார் என்றும் SCDF கூறியுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!