சிங்கப்பூரில் பிளாட் ஒன்றில் தீ விபத்து – விசாரணை தொடருகிறது..!

A fire broke out at Block 419 Fajar Road on Aug 16, 2020.
A fire broke out at Block 419 Fajar Road on Aug 16, 2020. (PHOTO Credit: CNA reader)

புக்கிட் பஞ்சாங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக பிளாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், அங்கிருந்து 10 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்து, பிளாக் 419 ஃபஜார் (Fajar) ரோட்டில் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பான முகநூல் பதிவுகள் – தெமாசெக் கண்டனம்..!

SCDF அதிகாரிகள் பலவந்தமாக உள்ளே நுழைந்து, நீர் ஜெட் பயன்படுத்தி தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த வளாகத்தில் இருந்து பத்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர், மேலும் இதில் யாருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று SCDF தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் திறக்கப்படும் சிங்கப்பூர்-மலேசிய எல்லை; உச்ச அளவை எட்டிய பயண விண்ணப்பங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg