போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 100 பேர் கைது

100 suspected drug offenders arrested
CNB

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 100 நபர்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கைது செய்துள்ளது.

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சுமார் S$470,000 போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் CNB கூறியுள்ளது.

உயிரிழப்பை ஏற்படுத்திய ஓட்டுநர்; சிறையில் அடைத்த சிங்கப்பூர் – 8 ஆண்டுகள் தடை

இந்த சோதனை நடவடிக்கைகள் கடந்த ஜூலை 18 மற்றும் ஜூலை 22 ஆம் தேதிகளுக்கு இடையில் பூன் லே, சாங்கி, செங்காங் மற்றும் தோ பாயா உள்ளிட்ட பகுதிகளில் நடந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

போதைப்பொருட்கள் மட்டுமல்லாமல் சுமார் S$63,097 ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக CNB செய்தி குறிப்பில் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களிடமும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சட்டத்திற்கு புறம்பான உதவி; சிக்கிய வெளிநாட்டு ஓட்டுநர்!