1,061 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்- தங்கம் கடத்தி வந்த நபரிடம் விசாரணை!

1,061 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்- தங்கம் கடத்தி வந்த நபரிடம் விசாரணை!
Photo: Trichy Customs (Preventive) Commissionerate

 

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 1,061 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பறந்த ‘Project Arpana’ குழுவினர்….ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவி செய்து அசத்தல்!

கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 614 என்ற விமானத்தில் ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவர் உடலில் தங்க பேஸ்ட்டுகளை மறைத்துக் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் கவனத்திற்கு…..’ItsRainingRaincoats’ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து, 66.68 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 கேரட் 1,061 கிராம் கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கம் கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.