சிங்கப்பூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 11 பேர் கைது.!

11 people arrested illegalgambling
Pic: SPF

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது, சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்டது மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டது ஆகியவற்றின் தொடர்பில் பெண் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில், 10 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் அடங்குவர், அவர்கள் 20 வயதுலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்.!

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அன்று, Zion சாலையில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் பிடிபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, போதைப் பொருள்கள், ரொக்கம், சூதாட்ட சாதனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 8 பேரிடம் மின்சிககெரட்டுகள் இருந்ததாகவும், அதன் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அறிவியல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மியான்மார் பணிப்பெண்னை கொடுமைப்படுத்தி கொலை செய்த பெண் – 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!