சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் இருந்த நேபாளம் நாட்டைச் சேர்ந்த 16 வயது பெண், நேற்று (27/09/2022) இரவு 10.00 PM மணி முதல் காணவில்லை. அவர் கடைசியாக, ஆங் மோ கியோவில் (Ang Mo Kio) உள்ள எம்ஆர்டி ஸ்டேஷனில் (MRT station) பாத்வேயில் இருந்துள்ளார். வெள்ளை நிற மேலாடையுடன் கூடிய நீல நிற பிளவுஸை அணிந்திருந்துள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது
இந்த பெண்ணை பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தாலோ, அவரை நேரில் பார்த்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை உடனடியாக தொடர்புக் கொண்டு தகவல் அளிக்கலாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது”. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் போன பெண்ணிடம் புகைப்படத்தையும் காவல்துறை பதிவிட்டுள்ளது.