சிங்கப்பூரில் இருந்து திருச்சி… ரூ.18 லட்சம் பொருள் கடத்தல் – சிக்கிய ஊழியர்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி... ரூ.18 லட்சம் பொருள் கடத்தல் - சிக்கிய ஊழியர்

தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தங்கம், வெளிநாட்டு பணம், உயிரினங்கள், போதைப் பொருட்கள் போன்றவற்றைக் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஏர்போர்ட் வரும் பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

“தலையில் வழுக்கை, திருமணம் நடக்கல”… முடி மாற்று சிகிச்சை செய்த இந்தியர் – கடுமையான முறையில் மரணம்

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் பயணித்த பயணிகளை ஏர்போர்ட் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த பயணியை பிடித்து தனியறைக்கு அழைத்துச் சென்று, அவர் கொண்டு வந்த கிரைண்டர் எந்திரத்தை சோதனை செய்தனர்.

அதனை அடுத்து அதில் தங்கம் மறைத்து கொண்டுவந்தது அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான சுமார் 347.50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் அலை…? அரசாங்கம் கூறும் தகவல்