சிங்கப்பூரில் புதிதாக 183 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

291 new coronavirus cases in Singapore, including 11 in the community
Image Credits : Jagen/Tamil Micset Media

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூலை 06) நிலவரப்படி, புதிதாக 183 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 44,983ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், 23 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது

அதில், 3 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், 20 பேர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.