தன் சொந்த தந்தையையே கொன்ற 19 வயது மகன்… சந்தேகத்தின்பேரில் கைது செய்த போலீஸ்

19-year-old arrested suspected murder his father Yishun Avenue4

சிங்கப்பூரில் தன் சொந்த தந்தையை கொன்ற சந்தேகத்தின்பேரில் 19 வயது மகனை பிடித்துள்ளது காவல்துறை.

47 வயதுடைய தந்தையை அவர் கொலை செய்ததாக நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 10) கைது செய்யப்பட்டார்.

திங்கள்கிழமை இரவு 7.05 மணியளவில் யுஷுன் அவென்யூ 4ல் உள்ள வீட்டில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் அறிக்கையில் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை உயர்வு – வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

அதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், அப்போது தந்தை குடியிருப்புப் பகுதிக்கு வெளியே அசைவில்லாமல் கிடப்பதை போலீசார் கண்டனர்.

அதன் பின்னர் அவரை சோதித்ததில் அவர் இறந்தது துணை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆடவரின் மகனான 19 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த இளைஞர் மீது புதன்கிழமை நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனையும் வழங்கப்படும்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

“உரிமம் இல்லாத ஊழியர்கள், பாதுகாப்பற்ற இயந்திரங்கள்…” – வரிசையாக சிக்கும் நிறுவனங்கள் – MOM அதிரடி ஆக்சன்