புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி, இன்று (செப்.23) அதிகாலை 05.00 மணிக்கு சுப்ரபாதம் பூஜைகள் (Suprabatham Prayers) நடைபெற்றது.

AYE விரைவுச்சாலையில் லாரிகள், வேன்கள், டாக்ஸி மோதி விபத்து

வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு மலர்களாலும், துளசி மாலைகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு பூஜையும், மஹா தீபாராதனையும் காட்டப்பட்டது.

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Photo: Hindu Endowments Board

புரட்டாசி சனிக்கிழமை என்பதால், அதிகாலை சுப்ரபாதம் பூஜைகளைக் காண 200- க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். கோயில் வளாகத்தில் அமர்ந்து, சிறப்பு பூஜைகளையும், பிரார்த்தனைகளையும் கண்டுகளித்தனர்.

சிக்கன் ரைஸ், கோழி கறி, முட்டை வெறும் S$0.20 மட்டும் – இரு தினங்களுக்கு மட்டுமே ஆஃபர்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், தோரணங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது.