கெயிலாங்கில் போக்குவரத்துக்கு இடையூறாக சண்டையிட்ட 2 ஓட்டுனர்கள் (காணொளி) – போலீசார் விசாரணை

கெயிலாங்கில் இரு ஆண் ஓட்டுனர்களுக்கு இடையே திங்கட்கிழமை (நவம்பர் 22) மதியம் சண்டை மூண்டது.

அதன் காரணமாக அந்த பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

சிங்கப்பூரின் VTL பயண ஏற்பாடு என்றால் என்ன? – விவரம்

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, புகாரை பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

ஆனால் மேலும் அதுபற்றி விவரிக்கவில்லை.

இந்த சம்பவம் சிம்ஸ் அவென்யூ மற்றும் லோரோங் 39 கெய்லாங் சந்திப்பில் மதியம் 1 மணியளவில் நடந்ததாக அது கூறியுள்ளது.

இருவர் மாறி மாறி அடித்து கொண்டு புல்வெளியில் புரளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சண்டை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசி சான்றுகள் – VTP போர்ட்டலில் எதைப் பதிவேற்றலாம்?