சிங்கப்பூரில் நேற்று ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 5:20 மணியளவில், சிலேத்தார் விரைவுச்சாலையை (SLE) நோக்கி செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் (CTE) நடந்த விபத்து குறித்து காவல்துறை எச்சரிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் ஐந்து கார்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் இணையத்தில் வெளியான காணொளிக் காட்சி மூலம் மூன்று கார்கள் வரிசையாக மோதிக்கொண்டதை காணமுடிகிறது. மேலும், கார் ஒன்று மற்றொரு காரின் மீது ஏறி நிற்பதையும் காணமுடிகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரின் மிகப் பெரிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 175 பேருக்குக் தொற்று பாதிப்பு..!
இந்த விபத்தில் சிக்கிய 56 வயதான ஓட்டுநரும், ஒரு காரைச் சேர்ந்த அவரது 58 வயது பயணியும், டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
Car kena lifted up by car behind
Posted by Singapore Road Accident on Friday, August 28, 2020
மருத்துவமனை அனுப்பட்ட இருவரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க : CECA உடன்பாடு இந்திய ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் உடனடி குடியுரிமை அல்லது PR வழங்காது: MTI விளக்கம்..!