சிங்கப்பூரில் சுமார் 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு ரெட்ஹில்லில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவியல் அத்துமீறல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுமையான நெருக்கடி, செலவினங்கள் அதிகரிப்பு – “சம்பள உயர்வு வேண்டும்” கோரிக்கை வைக்கும் ஊழியர்கள்!
பிளாக் 89 ரெட்ஹில் க்ளோஸ் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் இருந்த அவர்கள் பற்றி காலை 11.35 மணிக்கு காவல்துறைக்கு தகவல் வந்தது.
அதன் பின்னர் அதிகாரிகள் அங்கு வந்து பார்த்தபோது, 59 மற்றும் 62 வயதுடைய ஆண்கள் இருவரும் வீட்டில் தங்களைப் பூட்டிக் கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர்களை பத்திரமாக பிடிக்க அந்த பகுதியில் இரண்டு பாதுகாப்பு லைஃப் ஏர் பேக்குகள் பயன்படுத்தப்பட்டன.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவின் மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்ததாகவும் SCDF தெரிவித்தது.
இதனை அடுத்து சுமார் 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் பிடிபட்டனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் சாலையில் பயங்கர சண்டையில் ஈடுபட்ட ஆடவர்கள் – யார் அவர்கள்..?