சிங்கப்பூர் சாலையில் பயங்கர சண்டையில் ஈடுபட்ட ஆடவர்கள் – யார் அவர்கள்..?

Singapore_incidents/Instagram

பாயா லெபார் Squareல் ஆடவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (மே 3) மாலை சண்டையிட்டு கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அன்று இரவு 7.30 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். அதில் 60 பாயா லெபார் சாலை என்று முகவரிக் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் 17 வயது சிறுமியை இரண்டு வாரங்களுக்கு மேலாக காணவில்லை!

இது தொடர்பான வீடியோ Singapore_incidents என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டது.

அதில் குறைந்தது நான்கு ஆடவர்கள் அடித்துக்கொண்டு விழுவதையும், அதை பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதையும் காணமுடிகிறது.

இந்த சண்டை, பாயா லெபார் MRT நிலையத்திற்கு அருகில் உள்ள டாக்ஸி ஸ்டாண்டிற்கு அருகில் இருக்கும் திறந்தவெளி பகுதியில் நடப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

மலேசியாவுக்கு காரில் சென்ற சிங்கப்பூர் குடும்பம் – திடீரென விபத்தில் சிக்கிய கார்; உதவிக்கு விரைந்த பொதுமக்கள்